May 12, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70756 ஆக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், நோய் பரவல் வேகமெடுத்துக்கொண்டே செல்கிறது.
இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதா என கண்டறிய இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்தியாவின் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து ஆய்வு நடத்துகிறது.மாவட்டத்தின் 10 இடங்களில் இருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய
திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.