• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறதா?

May 11, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரனா அச்சத்தால் அத்தியாவிசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு பிற கடைகள் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இன்று முதல், 34 வகை கடைகளை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த கடைகளை திறக்கலாம் என்ற பட்டியலையும், அரசு வெளியிட்டுள்ளது.கொரோனா நோய் அதிகம் பரவிய பகுதிகள் தவிர,பிற பகுதிகளில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டன.அதன் வாயிலாக, நோய் பரவல் அதிகரிக்கிறதா என, கண்காணிக்கப்பட்டு வந்தது.அதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில்,ஊரடங்கு கட்டுப்பாடுகளை, மேலும் தளர்த்த,அரசு முன்வந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமின்றி, பிற தனிக் கடைகளை திறக்கவும், அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் டீக்கடைகள்,பேக்கரிகள் உணவகங்கள் பார்சல் வழங்கவும்,பூ, பழக்கடைகள், கட்டுமான பொருட்கள்,சிமென்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் திறக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிபடையில் கோவை ராஜவீதி,செட்டி வீதி பகுதியில் மளிகை கடைகள் மட்டுமே அதிகளவில் திறக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள கடைகளில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்துகிறது.ஊரடங்கு தளர்த்தப்பட்டலும் மக்களிடம் இன்னும் கொரனா அச்சம் இருப்பதால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் படிக்க