May 8, 2020
தண்டோரா குழு
இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டு அஞ்சு 2020 அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் கீதா தலைமையில் 100 பள்ளி மாணவர்களுக்கு சுமார் 60,000 ரூபாயில் அரிசி மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கினார்கள். மேலும் ஹிந்துஸ்தான் சாரண சாரணியர் இயக்கத்தின் விஜயராஜ் அவர்களால் ஒரு டன் காய்கறிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் அமைப்பினர் தியாகராஜன், ராஜாமணி, பசுமை கரங்கள் அமைப்பினர் அட்வகேட் ஜெயபிரகாஷ்,ஞானவேல்,அப்துல் கலாம் மன்ற அமைப்பினர் திரு ராஜேஷ் , தினேஷ்குமார்,கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும்,மகாலிங்கம் அவர்களால் கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.