• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட் 45 நாட்களுக்கு பின் இன்று திறப்பு

May 8, 2020 தண்டோரா குழு

கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட கோவை பழைய இரும்புக் மார்க்கெட் 45 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது, வாடகை, மின் கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியில் மாநகாராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான மெளலானா முகமது அலி இரும்பு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் சுமார் 350 கடைகள் உள்ளது. கோவை தொழில் நகரம் என்பதால் எப்போது வாடிக்கையாளர்களால் நிறைந்து காணப்படும், பழைய இரும்பு மார்க்கெட், கொரோனா தடுப்பு ஊரடங்கால் கடந்த 45 நாட்களாக மூடப்பட்டுள்ளது.ஏற்கனவே மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவந்ததால் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில்,தொடர்ந்து 45 நாட்கள் கடைகள் மூடப்பட்டதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும்,இதனை கருத்தில் கொண்டும் இரண்டு மாதங்களுக்கு வாடகை மற்றும் மின் கட்டணத்தை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க