• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சமூக விலகலை கடைபிடிக்க போலீசாருக்கு குடை..!

May 6, 2020 தண்டோரா குழு

சமூக விலகலை முறையாக கடைபிடிக்கும் விதமாக ரோட்டரி கிளப் சார்பில் கோவை போலீசாருக்கு குடை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில் சமூக விலகலை கடைபிடிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த நேரத்தில் மருத்துவப் பணியாளர்கள்,தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஊடகத் துறையினர் சமூக விதிகளை கடைபிடித்து மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர்.இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக குடைகளை உபயோத்து பல்வேறு தரப்பினரும் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். குடைகள் மூலமாக ஒருவரின் முன்பும், பின்னும் போதுமான இடைவெளி ஏற்படுத்தப்படும் என்பதால் இந்த முறையை பலரும் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இன்டஸ்ட்ரியல் சிட்டி, காட்டன் சிட்டி, எலைட் ஆஃப் ஆர்.ஐ 3201 ஆகிய அமைப்புகள் சார்பில் சாய்பாபா காலனி போலீசாருக்கு குடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப்பை சேர்ந்த பிரபு சங்கர், சரவணன், உமாசங்கர், ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

மேலும் படிக்க