• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாளையாறு சோதனை சாவடியில் கடும் சோதனைக்கு பின் வாகனங்கள் அனுமதி

May 6, 2020 தண்டோரா குழு

வாளையாறு சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனம் கடும் சோதனைக்கு பின் அனுமதி,நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக – கேரளா எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகள் கடந்த 35 நாட்களாக முழுமையாக மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து எடுத்துச் செல்லும் வாகனம் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் மே 4 க்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இ – பாஸ் எடுக்கும் பொது மக்கள் சோதனைக்கு பின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைகள் நடத்தப்படுவதால் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையாக நிற்கிறது. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டமாக இருப்பதை தவிர்க்க வலியுறுத்தும் நிலையில் விரைவாக வாகனங்களை சோதனை செய்து அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க