• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாளையாறு சோதனை சாவடியில் கடும் சோதனைக்கு பின் வாகனங்கள் அனுமதி

May 6, 2020 தண்டோரா குழு

வாளையாறு சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனம் கடும் சோதனைக்கு பின் அனுமதி,நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக – கேரளா எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகள் கடந்த 35 நாட்களாக முழுமையாக மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து எடுத்துச் செல்லும் வாகனம் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் மே 4 க்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இ – பாஸ் எடுக்கும் பொது மக்கள் சோதனைக்கு பின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைகள் நடத்தப்படுவதால் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையாக நிற்கிறது. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டமாக இருப்பதை தவிர்க்க வலியுறுத்தும் நிலையில் விரைவாக வாகனங்களை சோதனை செய்து அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க