• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 1 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிப்பதற்கான துவக்க விழா

May 1, 2020 தண்டோரா குழு

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக 1 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிப்பதற்கான துவக்க விழா கோவையில் நடைபெற்றது.

கோவையில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அமைப்புகள் தங்களால் இயன்ற அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.அதனடிப்படையில் உணவு வழங்குவது,வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பொதுமக்களுக்கு 1 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிப்பதற்கான துவக்க நிகழ்ச்சி கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளரும்,கோவை மக்கள் சேவை மையத்தின் தலைவருமான வானதி சீனிவாசன் ஆலோசனையின் பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கோவை மருத்துவ கல்லூரியின் முன்னாள் டீன் இந்திரா ப்ரனேஷ் தொடங்கி வைத்தார்.மாஸ்க்குகள் அனைத்தும் கோவையில் தேவையுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க