• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது மகிழ்ச்சி-மாவட்ட ஆட்சியர்

May 1, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது மாவட்டமாக இருந்த கோவை சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்திலுள்ள 400 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு தேவையான மளிகை பொருட்களை ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பில் வழங்க இருக்கின்றனர்.
இந்நிகழ்வின் தொடக்கமாக வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் கொரொனா தடுப்பு கண்காணிப்பாளர் ஞானசேகரன் இ ஆ ப, முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,

கோவையில் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தநிலையில் 132 பேர் முழுமையான குணமடைந்துள்ளனர். மீதம் கோவையில் இன்னும் 9 பேர் மட்டும் சிகிசையில் உள்ளனர்.இந்த சூழ்நிலையில் கோவையில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது.கே.கே புதூர் பகுதியில் விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டம் சிவப்பு நிற பகுதியில் இருந்து ஆரஞ்சு நிற பகுதியாக வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்புவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது.விரைவில் பச்சை மண்டலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் இன்னும் ஒருவார காலத்திற்குள் கோவையில் சிகிச்சையில் இருக்கும் 9 பேரும் வீடு திரும்புவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

மேலும் படிக்க