• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்கள் இந்த நோய்தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

April 9, 2020 தண்டோரா குழு

பொதுமக்கள் இந்த நோய்தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் ஏழை எளிய மக்களுக்கான விலையில்லா காய்கறிகளை வழங்கியப்பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து முதல்வர் அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில் தாங்கள் விளைத்த விவசாயப் பொருட்களை எடுத்துச் செல்ல விவசாயகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் ஏழு உழவர்கள் சந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

45 வட்டார தோட்டகலை மூலம் 15 வாகனங்கள் மூலம் காய்கறிகள் வீடுதோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவை விவசாயிகள் குளிர்பாதனகிடங்குகளை 30-04-2020 வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அம்மா உணவகத்தில் மட்டும் 20,000 ககும் மேற்பட்டோர் உணவறிந்து வருகின்றனர். வெளிமாநிலத்தவர்கள் 18,000 க்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

சமூக இடைவெறியை கடைபிடிக்க வேண்டும், அவசியம்மில்லாமல் வெளியே வரக்கூடாது. பொதுமக்கள் இந்த நோய்தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. 98 சதவீதம் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் . ஆனால் 2சதவீதம் பேர் இன்னும் நோய் தொற்று குறித்து கவலைப்படாமல் இருக்கிறார்கள். நோய்தடுப்பு நடவடிக்கைக்காக காருண்யா 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை இன்று ஒப்படைக்கின்றனர். முதல்வர் தேவையான நிதியை ஒதுக்கி வருகிறார்.மேலும் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளார் என்றார்.

மேலும் படிக்க