• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் துப்புரவு தொழிலாளர்கள் காலில் விழுந்து வணங்கிய பி.ஜே.பியினர்

April 8, 2020 தண்டோரா குழு

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் துப்புரவு தொழிலாளர்கள் காலில் விழுந்து வணங்கிய பி.ஜே.பி கட்சியினர்.

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல துறையினர் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பி.ஜே.பி கட்சியினர் மாவட்ட செயலாளர் விவேகனந்தன் தலைமையில் பேரூராட்சியில் உள்ள அலுவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்கள் கால்களில் மலர்கள் தூவி பாதபூஜை செய்து காலில் விழுந்து வணங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க