• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய குமரகுருவின் KARE அமைப்பு

April 3, 2020 தண்டோரா குழு

கொரோனா கிருமியின் தொற்றுதல் சர்வதேச அளவில் மக்களைப் பல்வேறு வழிகளில் பெருமளவில் பாதித்துள்ளது. இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புறும் மக்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டு குமரகுரு நிறுவனங்களின், குமரகுரு மீட்பு மற்றும் சமூக மேம்பாட்டு மையம் (KARE) 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது பல்வேறு இயற்கைப் பேரிடர்களின் போது மக்களின் துயர்நீக்கத் திட்டமிடுவதிலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், தீவிரமாக செயல்பட்டு மக்களின் இயல்பு மற்றும் உற்பத்தி வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்கு ஆதரவு அளித்து வந்துள்ளது.

KARE அமைப்பின் களப்பணி ஆற்றும் குழு, பேரிடர்களின் மூலம் மாறும் நிலைமைகளின் உண்மை நிலவரங்களைப் புரிந்து கொண்டு, அவ்விடத்திற்குரிய தற்காலிக நிவாரணத்தையும் வழங்குகின்றது. சமூக மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு பாதிப்பு அடைந்தவர்களுக்கு விரிவான மறுவாழ்வு தீர்வுகளை வழங்குகின்றது.

இந்நிலையில், கொரோனா கிருமித் தொற்றினால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நிலையில் மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் COVID – 19 குழுவினை இந்த KARE அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. இக்குழுவினர் குமரகுரு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட உணவு, கைகளைச் சுத்தம் செய்யும் திரவக் கிருமிநாசினி மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை உள்ளூர் அரசு நிர்வாகத்திற்கும், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மீட்புக் குழுவினருக்கும் வழங்கி ஆதரவளித்து வருகின்றது.

குமரகுருவின் KARE அமைப்பு இன்றைய சூழலில் தற்போது வரை கோவை சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் 3735 உணவுப் பொட்டலங்கள், 2500 முகக் கவசங்கள், 1200 கைகளைச் சுத்தம் செய்யும் திரவக் கிருமிநாசினி குப்பிகள், 500 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கி உள்ளது.

உலகில் பரவிவரும் கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக, நிலவிவரும் ஊரடங்கை கருத்தில் கொண்டு, குமரகுரு நிறுவனமானது குடிபெயர்ந்து கல்லூரில் வேலை செய்து வரும் 100கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் வழங்கியும், மேலும் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும், அதனைப் பின்பற்றுமாறும் வலியுறுத்துகிறது.

மேலும் படிக்க