கோவையில் இருந்து கண்டெய்னர் லாரியில் 250 வட மாநில தொழிலாளர்களை மறைத்து வைத்து ஏற்றி சென்ற 5 லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர் ஏஜி புதூர் பைபாஸ் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 5 கண்டைனர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வீதி கொரானா பீதி காரணமாக தர்மாகோல் லாரியில் 250 ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களை லாரியில் மறைத்து வைத்து அழைத்துச் சென்றது தெரியவந்தது.
197 பேர் 3 கண்டெய்னரில் ராஜஸ்தான் மாநிலத்திற்கும், 53 பேரை 2 கண்டெய்னரில் மத்திய பிரதேச மாநிலத்திற்கும் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் டெல்லியை சேர்ந்த ராஜேந்திர சிங் வயது (40) பல்ராம் 3(8) உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்திர பால் சிங் (28) டெல்லியை சேர்ந்த அணில் குமார் (28)உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் பாட்டியா (32) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். சட்ட விரோதமாக கூடுதல், நோய் தொற்றை பரப்புதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 5 லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்