• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்கு கடைகளில் கூட்டம் அலைமோதியது

March 29, 2020 தண்டோரா குழு

ஞாயிற்று கிழமை என்பதால் கோவையில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்கு கடைகளில் அதிகாலையில் இருந்தே அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவிசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல வேண்டும் என்றும்,தேவைகள் இல்லாமல் வெளியே வராமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும்,என அறிவுறுத்தப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் அதிகாலையே மீன் மற்றும் இறைச்சி வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.

அதன்படி கோவையின் முக்கிய இறைச்சி கூடமான உக்கடம் பகுதியில் மீன் மற்றும் இறைச்சிகளை வாங்குவதற்கு அதிகாலை 5 மணி முதலே மக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் கொரோணா நோய் பரவாமல் தடுக்க ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இறைச்சிகளை வாங்கி செல்ல வேண்டும் என்று வியாபாரிகளும் போலீசாரும் அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க