• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்கு கடைகளில் கூட்டம் அலைமோதியது

March 29, 2020 தண்டோரா குழு

ஞாயிற்று கிழமை என்பதால் கோவையில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்கு கடைகளில் அதிகாலையில் இருந்தே அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவிசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல வேண்டும் என்றும்,தேவைகள் இல்லாமல் வெளியே வராமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும்,என அறிவுறுத்தப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் அதிகாலையே மீன் மற்றும் இறைச்சி வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.

அதன்படி கோவையின் முக்கிய இறைச்சி கூடமான உக்கடம் பகுதியில் மீன் மற்றும் இறைச்சிகளை வாங்குவதற்கு அதிகாலை 5 மணி முதலே மக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் கொரோணா நோய் பரவாமல் தடுக்க ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இறைச்சிகளை வாங்கி செல்ல வேண்டும் என்று வியாபாரிகளும் போலீசாரும் அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க