• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாய்பாபா காலணி, உக்கடம் பேருந்து நிலையங்கள் காய்கறி சந்தையாக மாற்றம்

March 28, 2020 தண்டோரா குழு

சாய்பாபா காலணி, உக்கடம் பேருந்து நிலையங்கள் காய்கறி சந்தையாக மாற்றப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையான பால், காய்கறி, உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு அனுமதி யளிக்கப்பட்டது. கொரோனா தொற்று விரியம் மிகவும் அதிகம் என்பதால் தமிழகத்தில் கடுமையாக ஊரடங்கை பின்பற்ற தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் உழவர் சந்தைகள் காலை 4.30 மணி முதல் 9 மணி மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குறுகிய இடங்களில் சந்தைகள் அமைக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் டவுன்ஹால் காய்கறி மார்க்கெட் மற்றும் உக்கடம் காய்காறி மார்க்கெட், உக்கடம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் பொதுமக்கள் நெருக்கத்தை தடுக்க 1 மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் போடப்பட்டுள்ளது. காலை முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் காய்கறி வாங்க மக்கள் அதிகளவு வந்தனர்.

மேலும் படிக்க