• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

March 21, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், 11, 12 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க