• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

March 21, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், 11, 12 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க