• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் சர்வதேச மாநாடு

March 14, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயந்திர பொறியியல் துறை 13,14 மார்ச் அன்று “நிலையான சுற்றுச்சூழலுக்கான பொருட்கள், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி” குறித்த சர்வதேச மாநாட்டை நடத்தியது.
மாநாட்டில் பிரமுகர்கள், அழைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை முழு மனதுடன் வரவேற்று கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.வி.மோகன்ராம் உரையை நிகழ்த்தினார்.

பேராசிரியர் மற்றும் இயந்திர பொறியியல் தலைவரும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரருமான டாக்டர் என் சரவண குமார் மாநாட்டின் கருப்பொருளில் உரையாற்றினார் மற்றும் சுருக்கமாக மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை சுருக்கமாகக் கூறினார். பெறப்பட்ட 160 ஆவணங்களில் 110 ஆவணங்கள் வெளியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டன என்றும் அவர் விளக்கினார். இதைத் தொடர்ந்து பாலக்காடு திரவக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜாகோப் சந்தபில்லை உரையாற்றினார். மாநாட்டின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், (சஸ்டைனபிலிட்டி கன்சல்டன்ட்)நிலைத்தன்மை ஆலோசகர் டாக்டர் ஸ்வாதிமூர்த்தி பின்னர் தொடக்க உரையை நிகழ்த்தி மாநாட்டு நடவடிக்கைகளை வெளியிட்டார்.

துணை முதல்வர் டாக்டர் ஜி.சந்திரமோகன் அவர்கள், நிர்வாகம், அனைத்து அழைப்பாளர்கள், ஒழுங்கமைக்கும் குழு, மாணவர் தொண்டர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க