• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மது – நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற விழிப்புணர்வு வாசகம் மாற்றம்

March 13, 2020

மது பாட்டில்களில் இடம் பெற்றிருக்கும் ’மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு’ வாசகம் மாற்றப்படுகிறது.

சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அத்துறை அமைச்சசர் தங்கமணி மதுபானக் கடைகளைக் குறைப்பது குறித்து அத்துறை அமைச்சசர் தங்கமணி விளக்கினார். மேலும், அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பாட்டில்களில் இடம் பெற்றிருக்கும் எச்சரிக்கை வாசகமான ‘மது – நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சொற்றொடருக்குப் பதிலாக ‘மது அருந்துதல் உடல்நலத்துக்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்று சொற்றொடர் பயன்படுத்தப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க