• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம்

February 14, 2020

கோவை குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

கோவை குறிச்சி பொங்காளியம்மன் கோவில் அருகில் குளத்தில் அடையாளம் தெரியாத பென் சடலமாக மிதப்பதாக கோவை போத்தனூர் காவல் நிலையத்திற்கும், தீயனைப்பு துறைக்கும் தகவல் அளித்துள்ளார்கள். இதனையடுத்து மீட்புபணிக்கு வந்த தீயனைப்பு படை வீரர்கள் போலீசாருக்காக 2 மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருந்தனர். சடலத்தை மீட்டு யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாமல் காத்திருப்பதாக தீயனைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதனால் இன்று வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். இந்த குளத்தில் இறங்கும் வசதிக்காக படிதுறைகள் இருந்தது. சாலை அகலப்படுத்துவதற்காக மண்களை கொட்டி படிதுறைகள் மூடப்பட்டதாலும், நீர் நிறம்பியுள்ள குளத்திற்கு எந்த பாதுகாப்பு வேலியும் இல்லாததால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

மேலும் படிக்க