• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வனக் கோட்டத்தில் சிறுத்தை தாக்கி ஆடு,மாடு பலி பொதுமக்கள் அச்சம் ..!

February 13, 2020 தண்டோரா குழு

கோவை வனக் கோட்டத்தில் உள்ள சிறுமுகை வன சாரத்தில் சிட்டே பாளையம் திருச்சிக்காரர் பெரிய தோட்டம் என்பவரது தோட்டத்தின் சாலைக்கும் வனத்துறை கரட்டுக்கும் சுமார் 50 மீட்டர் தூரம் தான் உள்ளது. இந்நிலையில், நேற்றைக்கு முன்தினம் வனப்பகுதிக்கு மேய்வதற்கு சென்ற இவரது கன்றுகுட்டி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் வனப்பகுதிக்கு சென்று கன்று குட்டியை தேடி சென்று பார்த்ததில் கன்றுக்குட்டி சிறுத்தை தாக்கி இறந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்றும் சிறுத்தை ஆட்டுக்குட்டி ஒன்றைக் தாக்கி இறந்துள்ளது .இந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை வனசரக அலுவலர் மனோகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்தை பார்வையிட்ட விசாரணை செய்து வருகிறார்.

இதனையடுத்து, வனத்துறை ஒட்டியுள்ள கிராமத்துக்கு இரவு நேரங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்களையும் குழந்தைகளளையும் கால்நடைகளையும் தாக்கி உயிர் சேதம் ஏற்படவாய்ப்புள்ளதாகவும் பொதுமக்களின் நலனைக் கருதி வனத்துறை சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க