• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போக்சோ கைதி தப்பியோட்டம்

February 13, 2020

கோவையில் போக்சோ கைதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது தப்பியோடியுள்ளார்.

தாராபுரம் குண்டடம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் . இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில் சுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பலத்த பாதுகாப்புக்கிடையே சிகிச்சையில் இருந்த கைதி சுப்பிரமணியம் பாத்ரூம் ஜன்னலை வளைத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர ஆயுதப்படை காவலர்கள் பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பந்தய சாலை காவல் துறையினர்
அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராக்களில் தப்பியோடிய சுப்பிரமணியம் குறித்து தகவல்களை சேகரித்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள சிறைவாசிகளின் சிகிச்சை அறை போதிய பாதுகாப்பு இல்லாமல் , பழைய கட்டிடமாக இருப்பதாக , காவல் துறை அதிகாரிகள் , பல முறை மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர். அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனையின் முதல்வர் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எந்த வித நடவடிக்கையும், எடுக்காததே கைதி தப்பியோடிதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க