February 12, 2020
தண்டோரா குழு
தலைகவசம் அணிந்து வாகனம் ஒட்டியதால் நூல்லிலையில் உயிர் தப்பிய இளைஞர்கள். விபத்து குறித்தான பரபரப்பு சிசிடிவி
காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவையில் காந்திபுரத்தில் அமைந்துள்ள நகரப் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து செல்வது வழக்கம். கிராஸ்கட் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட பேருந்து சக்கரத்தின் கீழ் இரண்டு சக்கரவாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டது. பேருந்தை ஒட்டி அருகில் வந்த இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் பேருந்து ஓட்டுனர் பேருந்து நிலையத்துக்குள் திரும்ப முற்பட்ட போது எதிர்பாராவிதமாக இரு சக்கர வாகனமானது பேருந்தின் சக்கரத்தில் கீழ் மாட்டி தரதரவென இழுத்துச் சென்றது. உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் சகபயணிகள் இறங்கி விபத்துக்குள்ளான இருவரையும் மீட்டனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் ஓட்டுனரின் சாமார்த்தியமாக பேருந்தை நிறுத்தியதாலும், உயிர்பலி தவிர்க்கப்பட்டது.
தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் விபத்து குறித்து காட்டூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.