• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேருந்தில் பணத்தை திருட முயன்ற பெண் கைது

February 12, 2020

கோவையில் அரசு பேருந்தில் பெண்ணிடம் பணத்தை திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி அருகில் உள்ள சின்னசாமி நகரைச் சேர்ந்த சூரியகலா இவர் கணபதியில் இருந்து மதுக்கரை நோக்கி அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இவர் தனது கைபையில் 72 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். பேருந்து மரக்கடை அருகே சென்ற போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு பெண் கைபையை பறித்து தப்பி இறங்க முயன்றாள்.

சூரியகலா கூச்சலிட்டதால் பஸ்ஸில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில் அவர் மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த லதா என தெரியவந்தது. இவரை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.இந்தப் பெண் கோவையில் நடக்கும் கோவில் விழாக்களில் நகை பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. நகை பறிப்பு திட்டம் நிறைவேறாத நிலையில் பேருந்துகளில் கூட்டநெரிசலில் பயணிகளிடம் பணம் உள்ள பேக்கை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டபோது சிக்கியுள்ளார்.

மேலும் படிக்க