• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேருந்தில் பணத்தை திருட முயன்ற பெண் கைது

February 12, 2020

கோவையில் அரசு பேருந்தில் பெண்ணிடம் பணத்தை திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி அருகில் உள்ள சின்னசாமி நகரைச் சேர்ந்த சூரியகலா இவர் கணபதியில் இருந்து மதுக்கரை நோக்கி அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இவர் தனது கைபையில் 72 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். பேருந்து மரக்கடை அருகே சென்ற போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு பெண் கைபையை பறித்து தப்பி இறங்க முயன்றாள்.

சூரியகலா கூச்சலிட்டதால் பஸ்ஸில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில் அவர் மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த லதா என தெரியவந்தது. இவரை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.இந்தப் பெண் கோவையில் நடக்கும் கோவில் விழாக்களில் நகை பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. நகை பறிப்பு திட்டம் நிறைவேறாத நிலையில் பேருந்துகளில் கூட்டநெரிசலில் பயணிகளிடம் பணம் உள்ள பேக்கை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டபோது சிக்கியுள்ளார்.

மேலும் படிக்க