• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ‘லலித் கலாசேத்ரா மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

February 10, 2020 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் லலித் கலாசேத்திராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் லலித் கலாசேத்ராவின் மாணவிகளான தனுஸ்ரீ, பிரகதி சுரேஷ் மற்றும் ரசிகா ரஞ்சினி ஆகியோரின் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் வரவேற்புரை லலித் கலாசேத்ராவின் நிர்வாக இயக்குனர் ரவிராஜ் வழங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி கலிகாவிரி கல்லூரியின் நடன துறையின் பேராசிரியர் சரல் கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

கோவையின் பெருமையில் லலித் கலாசேத்திரா சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பரதநாட்டியத்தில் பல்வேறு திறமை மிக்க மாணவர்களை உருவாகி வருவதாகவும், இந்த அரங்கேற்றத்தில் போலவே இன்னும் பல்வேறு அரங்கேற்றங்கள், வெள்ளி விழாக்கள், பொன் விழாக்களை கொண்டாடியும் லலித் கலாசேத்திரா மென்மேலும் வளரவேண்டும் என்றும் கூறினார்.

அதனைத்தொடர்ந்து பரதநாட்டியம் அரங்கேற்றிய மாணவிகளுக்கு பெற்றோர்களுடன் விருதுகளை வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டிய கலைமணி விஜயலட்சுமி பரமேஸ்வரன், சுமித்ரா தினேஷ், வினைய பாலமுருகன், நிர்மலா ரவிராஜ் மற்றும் லலித் கலாசேத்திரா நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க