• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குடிபோதையில் தனியார் பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் கைது

February 10, 2020

கோவையில் குடிபோதையில் தனியார் பள்ளி வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தனியார் வாகன ஓட்டுனரை போலிசார் அழைத்துச் சென்றனர்.

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கிவரும் தனியார்பள்ளியில் படிக்கும் மாணவர்களை, பள்ளிக்கு அழைத்துவரும் பணிக்கு தனியார் வாகன உரிமையாளர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை இயக்கிவருகிறார்கள். இந்த நிலையில் கோவை விஜயயலட்சுமி மில்ஸ், நரசிம்மபுரம் பகுதியில் மாணவர்களை அழைத்துச்செல்ல வந்த வாகனம் நிலை தடுமாறி வீட்டின்முன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது ஏற்றி நிறுத்தியதால் பொதுமக்கள் குவிந்தனர் அதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

தகவல் அறிந்து வந்த குணியமுத்தூர் போலீசார் ஓட்டுனரை விசாரித்ததில் அவர் பெயர் முருகேசன் எனவும் அவர்குடிபோதையில் வாகனத்தை இயக்கியதும் தெரியவருகிறது. எனவே போலீசார் வாகனத்தை பரிமுதல் செய்து ஓட்டுனரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பள்ளிவாகன ஓட்டுனர். குடிபோதையில் வாகனம் இயக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

மேலும் படிக்க