• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்வியியல் கல்லூரிகளுக்கான தேர்வில் கோவை மாணவி மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை

February 7, 2020 தண்டோரா குழு

கல்வியியல் கல்லூரிகளுக்கான தேர்வுவில் கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவி மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

கல்வியியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் கடந்த 2019 மே மாதம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவி அ.லூமன் கிறிஸ்டி M.Ed தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 05.02.2020 அன்று சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சான்றிதழ்களும், ஊகத்தைத்தொகையும் வழங்கப்பட்டு பாராட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர குடும்பத்தில் பிறந்து அரசு கல்லூரியில் பயின்று இவ்வாறு சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க