• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியுரிமை சட்டத்திருத்த எதிராக கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சார்பில் கையெழுத்து இயக்கம்

February 7, 2020

குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் சார்பில் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு வருகின்றது.இதேபோல், கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், ஆத்துப்பாலத்தில் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் காதர் தலைமையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி துவக்கி வைத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடத்தில் கையெழுத்து பெறப்பட்டது.

பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கையெழுத்திட்டனர்.இதைத்தொடர்ந்து, மாநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட போத்தனூர், கவுண்டம்பாளையம் பகுதிகளிலும் கையெழுத்து இயக்கத்தை முத்துசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், பகுதி கழக பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், குனிசை லோகு, முன்னாள் நகராட்சி தலைவர்கள் குறிச்சி பிரபாகரன், ராஜமாணிக்கம், உதயக்குமார், மகாலிங்கம், பிலீப், நிசார், ரமணி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க