• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

February 5, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி என்பவரது மகன் சிவ பெருமாள் (35). கட்டிட தொழிலாளி. இவரது காமாட்சி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிவ பெருமாள் தனது வீட்டின் அருகில் உள்ள சமுதாய கூட்டத்தின் மேற்கூரையில் நின்றபடி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில்,சிவ பெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவர் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு அவரை பரிசோதித்த போது மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். தொடர்ந்து சிவ பெருமாளின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். தொடர்ந்து ,கோவை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது.
அங்கு, சிவ பெருமாளின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன.தொடர்ந்து அவரது கல்லீரல் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் சிவ பெருமாள் 3 பேருக்கு மறு வாழ்வு அளிக்க உள்ளார்.மேலும், இவரது கண்கள் தானமாக பெறவும் மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

மேலும் படிக்க