• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

February 5, 2020

கோவையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் போயர் வீதி சேர்ந்தவர் அர்ஜுன் இவர் 2017ஆம் ஆண்டு சிங்காநல்லூர் சேர்ந்த ரமேஷ் என்பவரை ஆலாந்துறை க்கு கடத்திச் சென்று கொலை செய்து ஆற்றில் புதைத்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்.இவர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இவருடைய பெயர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாம் தேதி திருவாடனை சேர்ந்த பார்த்திபன் என்பவரை வரதராஜ புரத்தில் வைத்து வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 5300 பறித்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இவர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்தார். அதற்கான உத்தரவுகளை சிங்காநல்லூர் போலீசார் சிறை துறை அதிகாரிடம் வழங்கினர் இதனையடுத்து அர்ஜுன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க