• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

February 5, 2020

கோவையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் போயர் வீதி சேர்ந்தவர் அர்ஜுன் இவர் 2017ஆம் ஆண்டு சிங்காநல்லூர் சேர்ந்த ரமேஷ் என்பவரை ஆலாந்துறை க்கு கடத்திச் சென்று கொலை செய்து ஆற்றில் புதைத்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்.இவர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இவருடைய பெயர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாம் தேதி திருவாடனை சேர்ந்த பார்த்திபன் என்பவரை வரதராஜ புரத்தில் வைத்து வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 5300 பறித்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இவர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்தார். அதற்கான உத்தரவுகளை சிங்காநல்லூர் போலீசார் சிறை துறை அதிகாரிடம் வழங்கினர் இதனையடுத்து அர்ஜுன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க