நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5 – 0 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 தொடரில் விளையாட வில்லை. அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், ஐந்தாவது டி20 போட்டியில் அவர் களமிறங்கி 60 ரன்களை குவித்தார்.அப்போது ஒரு விரைவு சிங்கிளை எடுக்கும் போது அவருக்கு கெண்டைச் சதையில் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஆனார்.
இந்நிலையில், ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ-யைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் பெயரை வெளியிடாது பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டி20 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா