தமிழக சட்டசபையில் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காவிரி பிரச்னை தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தமிழர்களை வஞ்சிக்கிறது. தமிழகத்தின் சார்பில் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் தரப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டும். பிறகு ஜனாதிபதியையும் நேரில் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தடையின்றி வழங்கவேண்டும் என வலியுறுத்த வேண்டும்.தமிழக சட்டசபை கூட்டத்தை கூட்டி உடனடியாக கூட்ட வேண்டும். தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விற்கு அது ஆதாரமற்ற தகவல் திமுக , காங்கிரஸ் ஒற்றுமையுடன் தான் உள்ளது என தெரிவித்தார்.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை