• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் கூடி கோலம் வரையும் திருவிழா

January 29, 2020

கோவையில் என் வழி தமிழ்வழி எனும் தலைப்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் கூடி கோலம் வரையும் திருவிழா நடைபெற்றது.

டாடா டீ சக்ரா கோல்ட் சார்பாக தமிழ் பெண்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கோலம் வரையும் கலையை உலகிற்கு உணர்த்தும் வகையில் மாபெரும் கோலம் வரையும் நிகழ்ச்சி கோவை அவினாசிலிங்கம் பெண்கள் நிகர்நிலை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் கூடி கோலம் வரைந்தனர்.என் வழி தமிழ் வழி எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆக பதிவு செய்யும் வகையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்து டாடா டீ சக்ரா கோல்டின் பிராண்ட் மேலாளர் மதுக்கூர் பேசுகையில், கோலம் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து பெண்களின் தினசரி நடவடிக்கையாகவும் சமய சடங்கை கொண்ட முக்கிய கலையாக உள்ளது தமிழ் கலாச்சாரத்தில் வீடுகளின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தின் இணைப்பு புள்ளியாக திகழும் இடங்களில் கோலம் வரைவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் தமிழகத்தில் நமது பிராண்டின் விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க