• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடும்ப பிரச்சனை காரணமாக கோவை சுந்தராபுரம் அருகே அரசு சாலையில் 8 கடைகளை அடைத்து கம்பி வேலி அமைத்ததால் பரபரப்பு

January 28, 2020

குடும்ப பிரச்சனை காரணமாக கோவை சுந்தராபுரம் அருகே அரசு சாலையில் 8 கடைகளை அடைத்து கம்பி வேலி அமைத்ததால் பரபரப்பு, குனியமுத்தூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை குறிச்சி சுந்தராபுரம் அருகே செங்கப்பகோணர் என்பருக்கு சொந்தமான நிலத்தில் 8 கடைகள் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 10 லிருந்து 30 வருடங்களுக்கும் மேலாக வணிகர்கள் கடை வைத்துள்ளனர். மேலும் இந்த கடை வாடகையை செங்கப்பகோணார் மூத்த மகனான மருதாச்சலம் என்பவரிடம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவரது இளைய மகன் பூபதி யாதவ் தன்னிடம் வாடகையை கொடுக்குமாறு வணிகர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் வழக்கம் போல் மருதாச்சலத்திடம் வாடகையை கொடுத்ததால் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கோவை – பொள்ளாச்சி சாலையில் கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார்.

இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நடைபாதையும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் செல்ல முடியாமல் சாலைகளில் இறங்கி செல்கின்றனர். தகவலறிந்து அங்கு வந்த குனியமுத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோதமாக போடப்பட்டுள்ள கம்பி வேலியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வேலி அமைத்த பூபதி யாதவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பூபதி யாதவ் மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிழுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க