• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தர்பார் வெளியான தியேட்டர்களில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

January 9, 2020

ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று படம் வெளியாகும் என அறிவித்ததை தொடர்ந்து, தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கோவையில் தர்பார் படம் 25 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் என்பதை தொடர்ந்து நள்ளிரவு முதலே படம் வெளியாகும் திரையரங்கு முன் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர். அதிகாலை 4 படம் திரையிடப்பட்டது. திரையரங்கு முன் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா,தர்சனா இரு திரையரங்கிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படம் பார்த்து விட்டு வந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து மகளிர் அணி நிர்வாகி முத்துலட்சுமி பேசுகையில்,

ரஜினி தனது இந்த வயதிலும் இளம் ரசிகர்களுக்கு சவால் விடும் வகையில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளதாகவும்,இந்த தர்பார் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ரஜினி மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் ஷரீப்,பாபு,அபு,ரவி,அக்கீம்,ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க