• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி2௦ போட்டியில் விராட் கோலி புதிய சாதனை

January 8, 2020 தண்டோரா குழு

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் எனும் பெருமையை, விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான 2ஆவது 20 ஓவர் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் களமிறங்கிய கோலி, ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் சேர்த்தார். 30 இருபது போட்டிகளில் கேப்டனாக களமிறங்கியுள்ள கோலி, அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர் எனும் பெருமையை இந்தப் போட்டியில் பெற்றார். அதேபோல இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 2663 ரன்களை குவித்துள்ள கோலி, அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். ரோகித் சர்மா இந்தப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க