• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

December 26, 2019

கோவை பன்னிமடையில், 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு நபருக்கும் தொடர்பு உள்ளது. அவரை கண்டுபிடிக்க வேண்டும் எனக்கூறி, சிறுமியின் தாயார் கோவை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

கோவை துடியலுார் அருகே பன்னிமடையில், கடந்த மார்ச்.,25 ல்,வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கை கோவை மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தால் வழக்கின் தீர்ப்பு நாளை (27.12.2019) வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, தனது மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி சிறுமியின் தாயார் கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இவ்வழக்கில் சந்தோஷ்குமார் மட்டுமே வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கை முடித்த நிலையில், சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க