• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரமடை பள்ளி மாணவன் தற்கொலை விவகாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

December 20, 2019

காரமடை வித்யவிகாஷ் பள்ளியை சேர்ந்த ஹரிஷ் (17) என்ற மாணவன் நேற்று தனியார் விடுதியில் தூக்கிட்டு தர்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தக்கோரி மாணவனின் உறவினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த குமார்-சுமத்ரா தம்பதியினரின் மகன் ஹரிஷ் காரமடை வித்யவிகாஷ் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். நேற்று மாலை தனியார் விடுதியில் ஹரிஷ் தூக்கிட்டு இறந்து கடந்த நிலையில் காவல்துறை மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இன்று மாணவனின் உடலை வாங்க மறுத்த அவரது பெற்றோர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இன்று மாலை மாணவனின் உறவினர்கள் சுமார் 100 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க