• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் துவக்கம்

December 18, 2019

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று பாலியல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட சிறப்பு நீதிமன்றம் மற்றும் குழந்தைகள்தோழமை நீதிமன்ற அறை போன்றவற்றை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்துவைத்தார்.இதில் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல்வேறு நீதிபதிகள் வழக்கறிஞர்கள் ,தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் காவல்துறையினர் என பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.இதை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தீர்வு செய்வதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று பாலியல் கென்றே விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க