December 5, 2019
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் அருகே கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்கள் நடந்ததால், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமை காவலர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், சம்பவத்தன்று சிங்காநல்லூர் அருகே உள்ள ஒரு சிப்ஸ் கடையில் இரண்டு நபர்கள் கடையில் பொருள் வாங்கிவிட்டு பணம் கொடுத்த பொழுது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்படவே வேறு நோட்டை கொடுக்குமாறு கூறினார். அவர்கள் வேறு நோட்டை கொடுத்தபோதும் மீண்டும் அவருக்கு சந்தேகம் ஏற்படவே அவர்களிடம் இந்த பணம் வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்த பொழுது, அப்பொழுது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் தலைமை காவலர் கோவிந்தராஜ் அந்தக் கடையில் வாக்குவாதம் செய்த இருவரை கூப்பிட்டு விசாரிக்கவே அவர்கள் நைஸாக தப்பி ஓட முயன்றனர். அப்பொழுதே போலீசார் அவர்களை துரத்தி பிடித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்பு விசாரித்ததில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகன் அரசியல் பிரான்சிஸ் வயது 29, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவரது மகன் பாஸ்கர் வயது 30 ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.