• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிறப்புருப்பில் ஆசிட் ஊற்றி கொடுமைபடுத்தியதாக கோவை சிறையில் இருந்து வெளியே வந்தவர் பேட்டி.

December 5, 2019

நீலிகிரி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவரின் பிறப்புருப்பில் ஆசிட் ஊற்றி கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு – கோவை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தவர் பேட்டிளி த்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவர் திருப்பூரில் கூலி வேலை செய்து வருகின்றார். இவரது குடும்பம் பந்தலூரில் உள்ள நிலையில், அவர்களை பார்க்க பந்தலூர் சென்றுள்ளார். அப்போது, தீபாவளி தினத்தன்று 27 ந்தேதி இவரும், இவரது நண்பர் சகாதேவனும் ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும் போது, தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கூறி இருவரையும், தேவாலா காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது. அங்கு அவர்களை காவல்துறையினர் சிவராஜின் பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

தொடர்ந்து இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையிலிருந்து வெளியே வந்த சிவராஜ் காவல்துறையினரால் அவருக்கு நேர்ந்த கொடுமையை கூறுகையில்;- பந்தலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், காவலர்கள் இசைக்கிமுத்து, மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் கண்மூடித்தனமாக தாக்கியும், பிறப்புறப்பில் ஆசிட் ஊற்றியும் கொடுமைப்படுத்தியதாகவும், அரசு மருத்துவமனை மற்றும் நீதிமன்றத்தில் எதுவும் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் கூறியவர், மத்திய சிறையில் அடைத்ததாகவும், அவர்களின் குடும்பத்தினர் மூலம் வெளியே கூறினால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால் அப்போது கூறவில்லை என தெரிவித்தார்.

சிவராஜின் தாய் கூறுகையில்,

தனது மகனின் கொடுமைக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், குடும்பத்துடன் தீ குளிப்பதை தவிற வேறு வழியில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் படிக்க