• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜன்னலில் சுடிதாரின் ஷால் வைத்து விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழப்பு

December 4, 2019

கோவை உக்கடம் அருகே வீட்டின் ஜன்னலில் சுடிதாரின் ஷால் வைத்து விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாகத்துல்லா, இவரது மகன் காஜா உசேன் (10). 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுவன் சுடிதாரின் ஷாலை வைத்து ஜன்னலில் கட்டி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அக்கா அம்ஷ்த் பேகம் வீட்டின் சமையல் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காஜா உசேன் ஜன்னளில் கட்டி இருந்த ஷால் சிறுவனின் கழுத்தில் இறுகி உள்ளது. இதில் போராடிய சிறுவன் மயக்கமடைத்துள்ளான்.

பின் மாலை வீட்டிற்கு வந்த பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைத்தனர். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது ஏற்கனவே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க