December 4, 2019
கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் நேற்று துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து ஊழியர்கள் மீது வெற்றிவேலன் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் கனரா வங்கி உள்ளது. இந்த வங்கியில் என்பவர் லோன் வாங்கி தருவதாக கூறி வெற்றி வேலன் என்பவரிடம் 3 லட்சம் பணம் வாங்கி கொண்டு லோன் பெற்றுதர வில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இடைதரகர் குணபாலன் தலைமை மேலாளர் சந்திரசேகர் பேசிக்கொண்டு இருந்த போது அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த வெற்றிவேலன் இடைத்தரகர் குணபாலன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது அவரை தடுக்க முயன்ற வங்கி தலைமை மேலாளர் சந்திரசேகர் மற்றும் ஊழியர்கள் மீது சிறிய கத்தியால் தாக்கியதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுயுள்ளது.
இதையடுத்து, கனரா வங்கி முதன்மை மேலாளர் சந்திரசேகர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் புகாரின் பேரில் வெற்றிவேலனை காவல் துறையினர் கைது செய்து கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.