• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயிரிழந்த 17 பேர் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை – முதல்வர் பழனிச்சாமி

December 3, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 17 பேர் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி,

17 பேர் இறந்தது வேதனையளிக்கிறது. சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்படிருக்கிறார். சட்டரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும்; சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். விபத்து நடந்த பகுதியில் உள்ள ஓட்டு வீடுகளை அகற்றிவிட்டு, அவர்களுக்கு கான்கரீட் வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றார்.

மேலும் படிக்க