December 3, 2019
தண்டோரா குழு
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 17 பேர் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி,
17 பேர் இறந்தது வேதனையளிக்கிறது. சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்படிருக்கிறார். சட்டரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும்; சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். விபத்து நடந்த பகுதியில் உள்ள ஓட்டு வீடுகளை அகற்றிவிட்டு, அவர்களுக்கு கான்கரீட் வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றார்.