• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாளை மேட்டுப்பாளையம் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

December 2, 2019 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதல்வர் பழனிசாமி
நடூர் கிராமத்திற்கு நாளை செல்கிறார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.நேற்றிரவு கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் ஏ.டி.காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் 10 அடி சுற்றுசுவர் இடிந்து அருகில் இருந்த மற்ற நான்கு வீடுகளின் மீது விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தீயனைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து மீட்பு பணிகளை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ, தாசில்தார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்திரவிட்டுள்ளார்.

இந்நிலையில்,வீடுகள் இடிந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதல்வர் பழனிசாமி நாளை மேட்டுப்பாளையம் செல்லவுள்ளார்.

மேலும் படிக்க