• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.எஸ்.எல். லீக் கால்பந்து;சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் அறிமுகம்

November 30, 2019

ஐ.எஸ்.எல். லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் சீருடை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் வரும் 1-ம் தேதி துவங்க உள்ளது.மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற உள்ள இதில் மணிப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

இந்நிலையில் சென்னை சிட்டி எஃப்சி அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. சீருடைகளை அணியின் தலைமை ஆலோசகர் விஜயராகவன் மற்றும் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சென்னை சிட்டி எஃப்சி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ், சென்னை சிட்டி எஃப்சி அணியில் 10-க்கும் மேற்பட்ட தமிழக வீரர்கள் கலந்து கொண்டு விறையாட உள்ளதாகவும், தற்போது அணியில் கூடுதலாக வெளிநாட்டை சேர்ந்த கட்சுமி மற்றும் அடால்ஃபோ ஆகிய இரு வீர்ர்களை சேர்த்துள்ளதாக கூறினார்.தொடர்ந்து அவர், 10 ஆட்டங்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறிய அவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர்களை அதிகம் எதிர்பார்ப்பதாகவும்,மேலும் நேரலை ஒளிபரப்பாக டி.டி ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் உதவி பயிற்சியாளர் சத்யா டகோரா,அணி ஒருங்கிணைப்பாளர் இன்குலாப் உட்பட அணி வீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க