• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் கொள்ளையடித்த 3 பேர் கைது

November 30, 2019

எலக்ட்ரானிக்ஸ் கடையில் ரூபாய் 2.50 லட்சம் கொள்ளையடித்த மூன்று நபர்களை காவல்துறை கைது செய்தனர்.

கோவை ஆர்எஸ் புரம் பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மதன்ராஜ். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கோவை காட்டூர் சோமசுந்தரம் ரோட்டில் எழுத்தாணி கடை நடத்தி வருகிறார். கடந்த ஏழாம் தேதி அன்று கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .லாக்கை உடைத்து யாரோ மர்ம கும்பல் உள்ளே புகுந்து அங்கிருந்து ரூபாய் இரண்டரை லட்சம் பணத்தை கொள்ளை அடித்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.கொள்ளைக் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை காட்டூர் ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்ற மூன்று நபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தெலுங்கானாவை சேர்ந்த சுரேஷ் பிரபு விழா ஆந்திராவைச் சேர்ந்த ஜெய ரெட்டி மற்றும் செய்து அஸ்மத் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் எழுத்தாணி கடையில் பணம் கொள்ளை அடிப்பதை ஒப்புக் கொண்டனர் மீண்டும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் அப்பகுதியில் அவர்களை சுற்றிவந்து விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஸ்குருடிரைவர் டார்ச்லைட் மற்றும் 2500 ரூபாய் கைப்பற்றப்பட்டது போலீசில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் தமிழகத்தில் சட்ட புள்ளிங் கொள்ளை நடத்த திட்டமிட்டோம் அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை கொள்ளையில் ஈடுபடும் இதற்காக ஆந்திராவில் இருந்து ரயிலில் வருவோம் பின்னர் கொள்ளையடித்து விட்டு மீண்டும் ரயிலில் சென்று விடுவோம் கொள்ளைப் பணத்தில் ஜாலியாக இருந்து வந்தோம் தற்போது போலீசின் பிடியில் சிக்கி கொண்டோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க