• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேக்கம்பட்டி யானைகள் முகாம் டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்ப்பு.

November 30, 2019

மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்பட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.கோவில்களில் ஆலய பணிகளுக்காக பயண்படுத்தப்படும் யானைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வையும் அதன் உடல் நலத்தை பாதுகாக்கவும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தபட்டு வருகிறது.

இந்த நிலையில் இவ்வாண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமானது டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகள் தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடைபெறும் இடத்தில் துவங்கியுள்ளது.
யானைகள் கட்டிவைக்கப்படும் இடம், பாகண்கள் தங்குமிடம் போன்ற பகுதிகள் புதர் மண்டி கிடப்பதால் அதனை சீரமைக்கும் பணியில் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானை முகாம் நடைபெறும் இடத்தில் மின்சார வசதிகள், கூடாரங்கள் அமைப்பது போன்ற பணிகளும் மிக தீவீரமாக நடைபெற்று வருகிறது.

கோவில்களில் திருப்பணிகளை மட்டும் மேற்கொண்டு வரும் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த முகாமில் கடந்தான்டு 30 க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்ற நிலையில் இவ்வான்டும் முகாம் சிறப்புடன் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க