November 28, 2019
தண்டோரா குழு
கோவை மங்களூர் ரயிலில் இருந்து, தவறி விழ இருந்த பயணியை , பாத்திரமாக ஏற்றி விட்ட காவலரை நிலைய இயக்குனர் பாராட்டி பரிசளித்தார்.
கோவையில் இருந்து மங்களூர் செல்லும், கோவை – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை கோவை ரயில் நிலையம் நடைமேடை எண் 3 ல் இருந்து , காலை 6.40 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட ரயிலில் மங்களூர் செல்ல வந்த கனவன், மனைவி , மகன், என குடும்பத்தினர், ஓடும் ரயிலில் பைகளுடன் ஏற முயன்றனர். அப்போது கணவன் மற்றும் மகன் ஏறிய நிலையில் பின்னால் பைகளுடன் ரயிலில் ஏறிய போது தவறி விழ இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே தலைமை காவலர் பாலகிருஷ்ணன் அவரை தாங்கி பிடித்து , ரயில் பெட்டியில் பத்திரமாக அனுப்பி வைத்தார்.
இந்த காட்சிகள் ரயில் நிலைய சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. இதனையடுத்து கோவை ரயில் நிலைய இயக்குனர் , தலைமை காவலர் பாலகிருஷ்ணனின் துரிதமாக செயல்பட்டு , பெண்மணியை காப்பாற்றியதற்காக பாராட்டி சான்றிதழ் மற்றும் 500 ரூபாய் வெகுமதியை வழங்கினார். இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் அவரை பாராட்டினர்.