• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உடல் உறுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

November 27, 2019

இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தையொட்டி உடல் உறுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் நவம்பர் 27ஆம் தேதி மத்திய சுகாதாரம்,மற்றும் குடும்ப நலத்துறையால் உடல் உறுப்பு தானம் நாளாக இன்று அனுசரிக்கப்பட்டு. தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதலிடம் பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இன்று 10வது இந்திய உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு கோவை பி எஸ்ஜி மருத்துவமனை மற்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக உடல் உறுப்பு தானம் பற்றியான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4பெட்டிகள் அடங்கிய உடல் உறுப்புகளை கோவை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாகவும்,தொடர் ஓட்டமாகவும் மருத்துவமனைக்கு 4 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உடல் உறுப்பு தானம் செய்த உறவினர்களுக்கு நன்றிகள் தெரிவிப்பதோடு மேலும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வர வேண்டும் என்று பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க