November 27, 2019
இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தையொட்டி உடல் உறுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் நவம்பர் 27ஆம் தேதி மத்திய சுகாதாரம்,மற்றும் குடும்ப நலத்துறையால் உடல் உறுப்பு தானம் நாளாக இன்று அனுசரிக்கப்பட்டு. தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதலிடம் பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இன்று 10வது இந்திய உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு கோவை பி எஸ்ஜி மருத்துவமனை மற்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக உடல் உறுப்பு தானம் பற்றியான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4பெட்டிகள் அடங்கிய உடல் உறுப்புகளை கோவை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாகவும்,தொடர் ஓட்டமாகவும் மருத்துவமனைக்கு 4 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உடல் உறுப்பு தானம் செய்த உறவினர்களுக்கு நன்றிகள் தெரிவிப்பதோடு மேலும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வர வேண்டும் என்று பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.