• Download mobile app
30 Jun 2025, MondayEdition - 3428
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் திடீர் சாலை மறியல்

November 26, 2019

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள வலியுறித்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“25 குழந்தைகளுக்கு குறைவான பள்ளி சத்துணவு மையத்தை மூட கூடாது. காலியாக உள்ள பணியிடங்களில் புதிய நியமனம் செய்ய வேண்டும். சமையல் உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிலிருந்து ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் ரூ 5 லட்சம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும்.” என்றார்.

மேலும் படிக்க