• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தல் பணிக்கான கோவை மண்டல ஆயத்த கூட்டம்

November 26, 2019

உள்ளாட்சி தேர்தல் பணிக்கான கோவை மண்டல ஆயத்த கூட்டம் , தேர்தல் ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு,திருப்பூர், நீலகிரி , கோவை மாவட்டங்களில் இருந்து ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்ட இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

ஏற்கனவே தேர்தல் ஆணையர் தலைமையில் முதல் கட்ட ஆய்வு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது தொடர்பாகவும், தேர்தல் விதிமுறைகள் அமுல்படுத்துவது, பாதுகாப்பு பணிகள், வாக்கு பதிவு மற்றும் எண்ணிக்கை தொடர்பாக , அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல், வாக்கு பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல், வாக்கு சாவடி மையங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்து இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க